நாட்டில் அதிகரித்து வரும் வாகன விபத்துக்கள்.

0

நாட்டில் வாகன விபத்துகளால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது.

இந்நிலையில் கடந்த ஜனவரி முதலாம் திகதி தொடக்கம் பெப்ரவரி 25 ஆம் திகதி வரையான காலப்பகுதியினுள் 434 வீதி விபத்துக்கள் இடம் பெற்றுள்ளது.

குறித்த விபத்துகளில் 457 பேர் உயிரிழந்துள்ளதாக காவல்துறை ஊடக பேச்சாளர் சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

இவற்றுள் 177 உந்துருளி விபத்துக்கள் பதிவாகியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் கடந்த ஒருவாரத்தில் இடம்பெற்ற நாற்பத்தி மூன்று வீதி விபத்துக்களில் 44 பேர் உயிரிழந்துள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply