நாடளாவிய ரீதியில் இன்றைய தினம் மின்சார விநியோகம் துண்டிக்கப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.
இந்நிலையில் இலங்கை மின்சார சபையின் கோரிக்கைக்கு அமைய குறித்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்னநாயக்க குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் 8:30 முதல் மாலை 5 30 வரையிலான காலப்பகுதியில் தென் மாகாணம் தவிர்ந்த நாட்டின் ஏனைய பகுதிகளில் ஒரு மணி நேர மின் துண்டிப்பு ஏற்படும்.
அவ்வாறு உயர்தர பரீட்சை இடம்பெறும் 8:30 முதல் 11.30 வரையிலும், பிற்பகல் 1.30 முதல் 4.30 வரையான காலப்பகுதியில் மின் துண்டிப்பு மேற்கொள்ளாதிருக்குமாறு பரீட்சைகள் ஆணையாளர் கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும் மாணவர்களுக்கு ஏற்படும் அசௌகரியத்தை தவிர்க்கும் பொருட்டு குறித்த கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
இதற்காக இரவு நேரத்தில் மின் துண்டிப்பால் மேற்கொள்வது தொடர்பில் ஆராயப்படுகின்றது.
இருப்பினும் இது தொடர்பில் எந்தவிதமான தீர்மானம் எடுக்கப்படவில்லை என பொது பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்னநாயக்க குறிப்பிட்டுள்ளார்.



