அமைச்சரவைக்கு வரவுள்ள அறிவிப்பு.

0

இலங்கையில் தற்போது பொருளாதார நெருக்கடி நிலவி வருகின்றது.

குறித்த நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்கு சர்வதேச நாணய நிதியத்தை நாடுவது குறித்து அடுத்தவாரம் அமைச்சரவைக்கு அறிவிக்கவுள்ளதாக நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச குறிப்பிட்டுள்ளதாக வர்த்தகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

அத்துடன் நிதி அமைச்சர் சர்வதேச நாணய நிதியத்துடன் தொடர்ச்சியாக பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து வருவதாகவும் அமைச்சர் பந்துல குணவர்தன சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் அரசாங்கத்தினால் தற்போதுவரை நிதியுதவியை வழங்குமாறு எவ்வித கோரிக்கையும் முன்வைக்கப்படவில்லை என சர்வதேச நாணய நிதியத்தின் தொடர்பாடல் திணைக்களப் பணிப்பாளர் கெரி ரைஸ் தெரிவித்திருந்தார்.

Leave a Reply