ஐ.நா மனித உரிமைகள் பேரவைக்கு, கடிதம் ஒன்றை அனுப்புவதற்காக, தமிழ்த் தேசியப் பரப்பில் இயங்கும் கட்சிகள் இன்றைய தினம் யாழ்ப்பாணத்தில் கூடி ஆராயவுள்ளதாக ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார்.
இதற்கமைய குறித்த கூட்டம் இன்று மாலை 4 மணியளவில் இடம்பெறவுள்ளது.
அத்துடன் ‘ஈழத்தமிழர் தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வும், – தேசிய பிராந்திய சர்வதேச நிலவரங்களும்’ என்ற தலைப்பில், அரசியல் கட்சிகளின் தலைவர்கள், அரசியல் ஆய்வாளர்கள், பேராசிரியர்கள் உள்ளிட்டோரின் பங்கேற்புடன் கூட்டமொன்றும் இன்று முற்பகல் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.



