வவுனியா – அநுராதபுரத்துக்கு இடையிலான தொடருந்து சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில் குறித்த தொடருந்து சேவைகள் எதிர்வரும் 5ஆம் திகதி முதல் 5 மாதங்களுக்கு இடைநிறுத்தப்பட உள்ளதாக தொடருந்து சேவைகள் பொது முகாமையாளர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் தண்டவாளங்களில் திருத்தம் மேற்கொள்ள உள்ளதால் இவ்வாறு 5 மாதங்களுக்கு புகையிரத சேவைகள் இடைநிறுத்தப்பட உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.