மும்பை பங்குச்சந்தையில் வர்த்தகம் உயர்வுடன் ஆரம்பமானது.

0

மும்பை பங்குச்சந்தையில் வர்த்தகம் நேற்று குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 58,142.05 புள்ளிகளுடன் நிறைவடைந்தது.

இந்நிலையில், இன்று காலை 9.30 மணிக்கு பங்குச்சந்தை தொடங்கியதும் 168 புள்ளிகள் உயர்ந்து 58,310.68 புள்ளிகளுடன் வர்த்தகமானது.

அத்துடன் தற்போது 10.30 மணி நிலவரப்படி சென்செக்ஸ் 139.16 புள்ளிகள் சரிந்து 58,002.89 வர்த்தகமாகிறது.

அதேபோல் தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி இன்று காலை 9.30 மணி நிலவரப்படி 19.70 புள்ளிகள் அதிகரித்து 17,372.15 புள்ளிகளில் வர்த்தகமானது. பின்னர், 10.30 மணி நிலவரப்படி 80.65 புள்ளிகள் சரிந்து 17,271 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.

இந்தியா விக்ஸ், பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆகிய பங்குகள் சரிந்து காணப்பட்டன.

அதானி போர்ட்ஸ், எச்டிஎப்சி லைஜப் இன்சூரன்ஸ், எம் அண்டு எம் ஆகிய பங்குகள் உயர்ந்து காணப்பட்டன.

மேலும் பங்குச்சந்தை இன்று காலை உயர்வுடன் தொடங்கிய நிலையில் தற்போது சரிவை கண்டு வருகிறது.

Leave a Reply