களனி பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் இடையே கடும் மோதல் இடம்பெற்று வந்தது.
இந்நிலையில் குறித்த மோதல் சம்பவத்தில் இரண்டு மாணவர்கள் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன் பல்கலைக்கழகத்தில் இறுதி ஆண்டு மாணவர்களால் இரண்டாம் ஆண்டு மாணவர்கள் தாக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் குறித்த மோதல் சம்பவம் நடந்ததற்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை.
இந்த சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.



