விருந்தகம் ஒன்றில் இடம்பெற்ற தீ பரவல்- ஒருவர் பலி.

0

விருந்தகம் ஒன்றில் இடம்பெற்ற தீ விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

இதற்கமைய குறித்த சம்பவம் லிந்துளையில் உள்ள விருந்தகம் ஒன்றில் இடம் பெற்றுள்ளது.

அத்துடன் விருந்தகதின் சமையலறையில் அவர் பணியாற்றிக் கொண்டிருந்தபோது அவரது ஆடையில் தீ பற்றியதால் குறித்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது.

72 வயதினையுடைய லிந்துலை – லெமனியர் தோட்டத்தை சேர்ந்தவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

மேலும் குறித்த சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.

Leave a Reply