எரிபொருட்களின் விலைகளை அதிகரிக்குமாறு கோரிக்கை.

0

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் எரிபொருட்களின் விலையை அதிகரிப்பதற்கு நிதி அமைச்சின் அனுமதியை கோரியுள்ளது.

இந்நிலையில் கடந்த மாதம் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் 6.8 பில்லியன் ரூபா நட்டமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நிதி அமைச்சின் அதிகாரபூர்வ அனுமதி கிடைக்கப்பெற்றதும் எரிபொருட்களின் விலைகள் எதிர்வரும் இரண்டு வாரங்களில் மீளவும் உயர்வடைய சாத்தியம் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த வாரத்தில் லங்கா ஐ.ஓ.சீ நிறுவனம் எரிபொருட்களின் விலைகளை உயர்த்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

உலக சந்தையில் கடந்த டிசம்பர் மாதம், 74 டொலராக காணப்பட்ட மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை, தற்போது 94 டொலர் வரையில் அதிகரித்துள்ளது.

எரிபொருள் விலை சூத்திரம் இறுதி செய்யப்பட்டுள்ளதாக வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

மேலும் குறித்த எரிபொருள் விலை சூத்திரம் தொடர்பான வரைபினை எதிர்வரும் 21 ஆம் திகதி அமைச்சரவையில் முன்வைக்கவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply