இன்றைய வானிலை தொடர்பில் வெளியான தகவல்.

0

நாட்டின் பல பாகங்களிலும் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் கிழக்கு, வடமத்திய ஊவா மாகாணங்களிலும் , அம்பாந்தோட்டை மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில பகுதிகளிலும் இன்று மழையுடனான வானிலை நிலவும்.

அத்துடன் நுவரெலியா, இரத்தினபுரி, களுத்துறை, காலி மாவட்டங்களின் சில பகுதிகளில் இன்று மாலை வேளையில் 75 மில்லி மீட்டர் அளவில் பலத்த மழை பெய்யும்.

ஆகவே பொதுமக்கள் அனைவரும் இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் மின்னல் தாக்கத்தினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக் கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.

Leave a Reply