மூன்று மாதங்களில் மின் துண்டிப்பு அவசியமா இறுதி தீர்மானம்.

0

பெப்ரவரி மார்ச் மற்றும் ஏப்ரல் ஆகிய மூன்று மாதங்களில் மின் துண்டிப்பு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இதற்கமைய 3 மாதங்களில் மின்சார துண்டிப்பு அவசியமென இலங்கை மின்சார சபை முன்வைத்த கோரிக்கை தொடர்பில் தீர்மானம் எடுப்பதற்கான விசேட கலந்துரையாடல் இன்று இடம்பெறவுள்ளது.

அத்துடன் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு மற்றும் இலங்கை மின்சார சபையின் உயர் அதிகாரிகளுக்கு இடையில் குறித்த சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டது.

மேலும் மின்சார துண்டிப்புக்கான அனுமதியை வழங்குவதா? இல்லையா என்பது குறித்து இதன்போது தீர்மானிக்கப்படும்.

பொதுமக்கள் மின் நுகர்வை குறைக்க வேண்டும் என்றதுடன் நாளொன்றுக்கு 300 மெகாவாட் மின்சாரத்தை குறைக்க முடியுமாயின் இலக்கை நோக்கி பயணிக்க முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply