சுமார் ஒரு கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியான இரண்டு வலம்புரிகளை சட்டவிரோதமாக விற்பனை செய்ய வைத்திருந்த நபரொருவர் கைது செய்யபட்டுள்ளார்.
இதற்கமைய குறித்த நபர் மூதூர் காவல்துறை பிரிவிற்குட்பட்ட நெய்தல் பகுதியில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போது கைது செய்யப்பட்டுள்ளனர்..
அத்துடன் மூதூர் பகுதியைச் சேர்ந்த 44 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும் குறித்த சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.



