சட்டவிரோதமான முறையில் இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 21 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.
இந்நிலையில் இவ்வாறு கைது செய்யப்பட்ட 21 இந்திய மீனவர்களின் விளக்கமறியல் மேலும் இரண்டு வாரங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் குறித்த மீனவர்கள் கடந்த முதலாம் திகதி பருத்தித்துறை கடற்பரப்பில் வைத்து கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.
இதன் பிரகாரம் அவர்கள் எதிர்வரும் 21ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு பருத்தித்துறை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.



