திருமணத்திற்கு பிறகு பெண்கள் கட்டாயம் தெரிந்து வைத்திருக்க வேண்டிய மந்திரம்!

0

திருமணத்திற்கு பிறகு பெண்கள், தங்களது கணவனின் அன்பை முழுமையாக பெற வேண்டும் என்றும், கணவன் எந்த நேரமும் தன்னை நினைக்க வேண்டும் என்றும், தன்னையே சுற்றி சுற்றி வர வேண்டும் என்றும் எல்லா பெண்களுமே ஆசைப்படுவது வழக்கம் தான்.

திருமணத்திற்கு பிறகு பெண்கள் தங்களது கணவனை தன்னுடைய முந்தானையில் முடிந்து வைக்க வேண்டிய மந்திரமாக சிலவற்றை கூறலாம்.

திருமணத்திற்கு பிறகு பெண்கள், தங்களது கணவனின் அன்பை முழுமையாக பெற வேண்டும் என்றும், கணவன் எந்த நேரமும் தன்னை நினைக்க வேண்டும் என்றும், தன்னையே சுற்றி சுற்றி வர வேண்டும் என்றும் எல்லா பெண்களுமே ஆசைப்படுவது வழக்கம் தான் கணவனை முந்தானையில் முடியும் ரகசியம்

ஆனால், பல பெண்களுக்கு தனது கணவனை தனது சேலை முந்தானையில் முடிந்து வைத்துக் கொள்ளும் ரகசியம் தெரியாமலேயே இருக்கிறது. அவற்றை தெரிந்து கொள்ள இங்கு சில விஷயங்கள் பற்றி விரிவாக காணலாம்.

ஒவ்வொரு பெண்ணும், திருமணத்திற்கு பிறகு இந்த மூன்று வார்த்தையை மறந்துவிடுகிறார்கள். ஆனால், இந்த வார்த்தைக்கு மிகப்பெரிய சக்தி இருக்கிறது. என்னதான் பிஸியான வாழ்க்கையாக இருந்தாலும், இந்த மூன்று வார்த்தைகளையும் நாம் காலப்போக்கில் மறந்துவிடுகிறோம். இந்த மூன்று வார்த்தையும் கணவனின் அன்பை பெறுவதற்கு ஏற்ற ஒன்றாக இருக்கும்.முத்தம் கொடுங்கள்

உங்களது கணவருக்கு அடிக்கடி முத்தம் கொடுக்கும் பழக்கத்தை வைத்துக் கொள்ளுங்கள். அலுவலகத்திற்கு சென்றாலும், பிடித்தவற்றை செய்தாலும், அவருக்கு முத்தத்தை கொடுங்கள்.

எப்போதும், உங்கள் கணவர் மீது நம்பிக்கை வையுங்கள். அவரது முடிவுகள் மீது நம்பிக்கை இருக்கட்டும். எப்போதும், அவர் சொல்லும் விஷயம் சரியாகத்தான் இருக்கும் என்று நம்புங்கள். ஒருவேளை தவறாக இருந்தால், அவருக்கு புரியும் படி எடுத்துச் சொல்லுங்கள். இதனால், தனது பேச்சுக்கு வீட்டில் மரியாதை இருக்கிறது என்று அவர் தெரிந்து வைத்துக் கொள்வார்.

தனது பிறந்த வீட்டு பெருமை பேசுவதை எந்த ஆணும் விரும்ப மாட்டான். ஒருவேளை நான் அப்படியிருந்தேன், என்னை அப்படி பார்த்துக் கொண்டார்கள் என்று பெருமை பேச ஆரம்பித்துவிட்டாள், இது கண்டிப்பாக கணவனுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். வேண்டுமென்றால், என் கணவர் என்னை எப்படியெல்லாம் தாங்குகிறார் தெரியுமா? என்னை அவரது உள்ளங்கையில் வைத்து தாங்குகிறார் என்று புகழுங்கள். அப்புறம் நீங்கள் தான் எஜமானியம்மா.

எவ்வளவு தான் சீரியஸான பெண்ணாக இருந்தாலும் சரி, உங்களது கணவரிடம் குழந்தையாகவே இருங்கள். கொஞ்சி விளையாடுங்கள். எப்போதும், அலுவலகத்தில் இருந்து வரும் உங்களது கணவருக்கு உங்களது செய்கை மிகவும் சந்தோஷத்தைக் கொடுக்கும்.

உங்களது கணவர் வீட்டாரை அடிக்கடி குறைக் கூறிக் கொண்டிருக்காதீர்கள். அது அவர்களுக்கு பிடிக்காமல் போகும். எப்போதும், கணவரிடம் அன்பாக மட்டும் தான் பேச வேண்டும். இல்லையென்றால், கணவர் உங்களை விட்டு வெளியில் தான் இருப்பார்.

திருமண வாழ்வில் சண்டையில்லாத குடும்பம் என்று எதுவும் இல்லை. கணவன், மனைவி சண்டையை எப்போதும், மனதில் வைத்துக் கொண்டே இருக்கக் கூடாது. என்ன தான் சண்டை என்றாலும், அதனை உடனே மறந்துவிட்டு இயல்பாக நடந்து கொள்ள வேண்டியது அவசியம்.

எப்போதும், கட்டிப்புடி வைத்தியத்திற்கு உண்மையாகவே அதிக பலன் உண்டு. எனவே எப்போதும், உங்களது கணவரை கட்டிப்பிடியுங்கள். இது இருவருக்குள்ளும் நெருக்கத்தை அதிகரிக்கும்.- Source: tamil.samayam

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி.

Leave a Reply