அரசாங்க அமைச்சர்கள் தங்களில் மனதில் உள்ள பிரச்சினைகளை பொதுவெளியில் பேசுவது பொருத்தமற்றது என விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் நேற்றைய தினம் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அதாவது ”இந்நாட்டு மக்கள் எங்களுக்கு வாக்களித்தது ஒவ்வொருவரும் அரசனாகுவதற்கு அல்ல.
ஆகவே ஜனாதிபதியை தெரிவு செய்தால் அந்த ஜனாதிபதியின் கொள்கையை பின்பற்ற வேண்டும்.
நாம் அனைவரும் தனித்து ஆட்சியமைக்க முயலாமல் மக்களை ஆள முயற்சித்தால் சிறப்பாக இருக்கும்.