தற்போது நாட்டில் டெங்கு தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது.
இந்நிலையில் நாடு தழுவிய ரீதியில் இன்று மற்றும் நாளை ஆகிய தினங்களில் டெங்கு ஒழிப்பு விசேட வேலைத் திட்டத்தை நடைமுறைப் படுத்துவதற்கு மாகாண சபை மற்றும் உள்ளுராட்சி மற்றும் ராஜாங்க அமைச்சு திட்டமிட்டுள்ளது.
அத்துடன் அனைத்து அமைச்சுக்கள், உள்ளூராட்சி மன்ற நிறுவனங்கள் , அரச சார்பற்ற அமைப்புகள் கூட்டாக இணைந்து இந்த வேலைத் திட்டத்தை முன்னெடுக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.



