நீண்ட நாள் வார விடுமுறையின் போது பல்வேறு பணிகளில் ஈடுபட்டிருந்த மற்றும் மக்கள் பெருமளவு கூடிய இடங்களில் இருந்தவர்களுக்கு காய்ச்சல் அல்லது சுவாசம் தொடர்பான நோய் நிலமை அவதானிக்கப்படும் பட்சத்தில் விரைவில் வைத்திய பரிசோதனை மேற்கொள்வது அவசியம் என விசேட வைத்திய நிபுணர் கேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் கொவிட் தொற்றால் பாதிக்கப்படும் நோயாளிகளுக்கு ஆக்சிஜன் தேவையில் சிறிய அளவு அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.
அத்துடன் சுகாதார கட்டமைப்பிற்கு அழுத்தமாக இல்லாத போதிலும் இந்த நிலை மேலும் அதிகரிப்பதை தடுப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் கடந்த எட்டு நாட்களுக்குள் போர்ட் சிற்றி நகரை பார்வையிடுவதற்காக 89,540 பேர் வருகை தந்தமை குறிப்பிடத்தக்கது.



