அரச ஊழியர்கள் தொடர்பில் வெளியான தகவல்.

0

அரச உத்தியோகத்தர்களுக்கு மாதாந்தம் 5000 ரூபா மேலதிக கொடுப்பனவு வழங்க தீர்மானிக்கப்பட்டது.

இந்நிலையில் குறித்த மேலதிக கொடுப்பனவை ஆசிரியர்கள் பெற்றுக்கொள்ள முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் அம்பாறை வலயக் கல்வி அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதாவது அரச உத்தியோகத்தர்களுகாக 5000 ரூபாய் கொடுப்பனவு 2022 ஜனவரி முதல் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.

இந்த மேலதிக கொடுப்பனவு , ஆசிரியர் கொடுப்பனவில் காட்டப்பட்டுள்ள போதிலும், அது கொடுப்பனவு டன் சேர்க்கப்படவில்லை என அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் ஓய்வூதியதாரர்களுக்கும் இந்த மேலதிக கொடுப்பனவு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

இதன் பிரகாரம் 666,480 ஓய்வூதியதாரர்களுக்கு 5,000 ரூபா மாதாந்த மேலதிக கொடுப்பனவை வழங்க முன்மொழியப்பட்டது.

Leave a Reply