இன்று மின் துண்டிப்பு ஏற்படாது.

0

இலங்கையில் இன்றைய தினம் மின்சார விநியோகம் துண்டிக்கப்பட மாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நாளாந்தம் மின் உற்பத்தி நிலையத்திற்கு தேவையான எரிபொருளுக்கு பற்றாக்குறை நிலவுவதால் மின்வெட்டு அமுல்படுத்தப்பட வேண்டுமென இலங்கை மின்சார சபை தொழிலாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

அத்துடன் எரிபொருள் பற்றாக்குறை காரணமாக களனிதிஸ்ஸ் மற்றும் சபுகஸ்கந்த மின் உற்பத்தி நிலையங்கள் நேற்று முன்தினம் மூடப்பட்டது.

இருப்பினும் களனிதிஸ்ஸ் மின் உற்பத்தி நிலையத்திற்கு 10, 000 மெற்றிக் டன் எரிபொருளை வழங்குவதற்கு கனிய வள கூட்டுத்தாபனம் இணக்கம் தெரிவித்தது.

இதன் பிரகாரம் மின்வெட்டு அமுல்படுத்தப்பட மாட்டாது என அமைச்சர் காமினி லொக்குகே குறிப்பிட்டுள்ளார்.

இருப்பினும் நாட்டில் அமைந்துள்ள மின் உற்பத்தி நிலையங்களும் இயங்குவதற்கு தேவையான எரிபொருளை இன்மையால் மின் துண்டிப்பு மேற்கொள்ளவுள்ளதாக மின்சார சபை பொறியியலாளர்கள் சங்கம் குறிப்பட்டுள்ளனர்.

Leave a Reply