புகையிரத்தில் மோதுண்டு நபரொருவர் பலி.

0

களுத்துறை தெற்கு காவல்துறை பிரிவிற்குட்பட்ட பகுதியில் புகையிரதத்தில் மோதுண்டு நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இதற்கமைய குறித்த சம்பவம் நேற்று தினம் மாலை இடம்பெற்றுள்ளதாக காவல்துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

அத்துடன் குறித்த நபர் அழுத்கமையிலிருந்து மருதானை நோக்கி பயணித்த புகையிரதத்தில் மோதுண்டு உயிரிழந்துள்ளார் .

மேலும் குறித்த நபரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக நாகொடை வைத்தியசாலையில் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை களுத்துறை காவற்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.

Leave a Reply