தமிழக மீனவர்களின் விளக்கமறியல் மீளவும் நீடிப்பு.

0

இலங்கைக் கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து சட்டவிரோதமான முறையில் கடற்தொழில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 13 தமிழக மீனவர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் குறித்த 13 தமிழக மீனவர்களும் இன்றையதினம் ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

இதன்போது இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்ட மீனவர்களை எதிர்வரும் முதலாம் திகதி வரையில் மீள் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply