திருவள்ளுவர் தினத்திற்கு வாழ்த்துக்கள் தெரிவித்த பிரதமர் நரேந்திர மோடி.

0

தமிழில் திருக்குறளை இயற்றிய திருவள்ளுவரை போற்றும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் தை இரண்டாம் நாள் திருவள்ளுவர் தினமாக கொண்டாடப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் குறித்த தினத்தையொட்டி, திருவள்ளுவருக்கு மரியாதை செலுத்தும் விதமாக பலரும் தங்களின் சமூக வலைத்தள பக்கங்களில் , திருக்குறளை பதிவிட்டு திருவள்ளுவரின் பெருமையை நினைவுகூர்ந்து வருகின்றனர்.

இதற்கமைய பிரதமர் நரேந்திர மோடி திருவள்ளுவரின் தினத்தை முன்னிட்டு திருவள்ளுவர் குறிப்பு தமிழில் பதிவிட்டுள்ளார்.

அதாவது திருவள்ளுவர் தினத்தில் அவருக்கு அஞ்சலி செலுத்துகிறேன். அவரது கோட்பாடுகள் அறிவுத்திறன் மிக்க நடைமுறைக்கேற்றவை. பன்முகத்தன்மை & அறிவுசார் ஆழத்திற்கு அவை தனித்து நிற்கின்றன. கடந்த ஆண்டு நான் கன்னியாகுமரியில் எடுத்த திருவள்ளுவர் சிலை & விவேகானந்தர் நினைவகத்தின் காரணியை பார்க்கின்றேன்.

இவ்வாறு பிரதமர் மோடி தனது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்

Leave a Reply