இன்றும் மின் துண்டிப்பு ஏற்படுமா?

0

நாட்டின் பல பாகங்களிலும் நேற்று இரவும் ஒரு மணி நேர மின் துண்டிப்பு அமுல்படுத்தப்பட்டது.

இந்நிலையில் மின்சாரத்தை தொடர்ச்சியாக விநியோகிப்பதில் ஏற்பட்டுள்ள பிரச்சினை காரணமாகவே இந்த மின்சார துண்டிப்பு ஏற்பட்டது.

அத்துடன் இலங்கை கனியவள கூட்டுத்தாபனம் வழங்கும் 3,000 மெற்றிக் டன் டீசலை தரையிறக்கும் நடவடிக்கை நேற்று மாலை முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் தற்போதைய நிலையில் இன்றைய தினமும் மின் துண்டிப்பு அமுலாக்குவது தொடர்பில் இலங்கை மின்சார சபை இதுவரையில் உத்தியோகபூர்வமாக அறிவிக்கவில்லை.

Leave a Reply