மணிப்பூரில் 4.0 ரிக்டர் அளவுகோலில் மிதமான நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
இந்நிலையில் குறித்த நிலநடுக்கம் மணிப்பூர் மாநிலத்தின் இம்பால் பகுதியில் அதிகாலை 2.17 மணி அளவில் இடம்பெற்றுள்ளதாக தேசிய புவியியல் மையம் தெரிவித்துள்ளது.
அத்துடன் பூமிக்கடியில் 41 கி. மீ ஆழத்தில் மையமாகக் கொண்டு ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.0 ஆக பதிவாகியுள்ளது.
இருப்பினும் இதுகுறித்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து இதுவரை எந்தவிதமான தகவலும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.



