இந்தியாவில் கொவிட் தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் குறித்த தொற்றுப் பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு நேர ஊரடங்கு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.
இதற்கமைய பிரதமர் நரேந்திர மோடி அனைத்து மாநில முதல்-மந்திரிகளுடன் காணொளி மூலம் ஆலோசனை நடத்தவுள்ளார்.
மேலும் குறித்த ஆலோசனைக் கூட்டம் மாலை 4.30 மணிக்கு ஒன்று இடம்பெறவுள்ளது.