எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வவுனியா மாவட்டத்திற்கு இன்று விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.
இதற்கமைய சஜித் பிரேமதாசவின் குறித்த விஜயத்தை அடுத்து வவுனியா மாவட்டத்தில் பலத்த பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.
அத்துடன் இந்த விஜயத்தின் போது மதஸ்தலங்களுக்கு விஜயம் , உதவித் திட்டங்கள் வழங்கும் நிகழ்வு, வைத்தியசாலைக்கு விஜயம், ஊடக சந்திப்பு, மக்கள் சந்திப்பு, பிராந்திய காரியாலய திறப்பு விழா போன்ற பல்வேறு நிகழ்வுகளில் சஜித் பிரேமதாச உள்ளிட்ட உயர்மட்ட குழுவினர் கலந்து கொள்ளவுள்ளனர்.
மேலும் வைத்தியசாலை வளாகம் ஏ -9 வீதி, வைத்தியசாலை சுற்றி வட்ட வீதியில் திருமங்கலக்கோட்டை பகுதிகளில் காவல் துறையினர் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.



