அரசுத்தலைவர் கோட்டாபய ராஜபக்சவின் சிம்மாசன உரை.

0

அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ஷவின்சிம்மாசன உரை சம்பந்தமாக இரண்டு நாள் விவாதம் ஒன்றை வழங்குமாறு எதிர்க்கட்சியின் பிரதம கொறடா லக்ஷ்மன் கிரியல்ல சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்நிலையில் அரசாங்கத்தின் கொள்கையை விளக்கும் அரச தலைவரின் சிம்மாசன உரை எதிர்வரும் 18ம் திகதி நாடாளுமன்றில் நடைபெறவுள்ளது.

அத்துடன் அரச தலைவரின் குறித்த உரை சம்பந்தமாக 19 மற்றும் 20 ஆம் திகதிகளில் சபை ஒத்திவைப்பு விவாதத்தை வழங்குமாறு கிரியல்ல சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் ஒத்திவைக்கப்பட்ட நாடாளுமன்ற கூட்டத்தொடர் அரசுத் தலைவர் தலைமையில் எதிர்வரும் 18ஆம் திகதி மீண்டும் ஆரம்பமாகவுள்ளது.

இதன்போது அரச தலைவர் சங்கத்தின் அடுத்த கட்ட நடவடிக்கைகள் உட்பட அரசாங்கத்தின் கொள்கைகள் தொடர்பான சிம்மாசன உரை நிகழ்த்தவுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply