நாட்டில் இன்று மின் விநியோக தடை.

0

இலங்கையில் நாடளாவிய ரீதியில் இடைக்கிடையே மின் விநியோகம் தடைப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் களனி திஸ்ஸ மின் உற்பத்தி நிலையத்தில் செயலிழந்துள்ள மின்பிறப்பாக்கியை சீரமைக்க முடியாத காரணத்தால் இடைக்கிடையே நாடளாவிய ரீதியில் மின்சார தடைபடும் என்று இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.

அத்துடன் களனிதிஸ்ஸ மின் உற்பத்தி நிலையத்தில் உள்ள மின் பிறப்பாக்கி ஒன்றில் ஏற்பட்ட கோளாறு காரணத்தால் நேற்றைய தினம் இரவு நாட்டின் சில பாகங்களில் மின்சார விநியோக தடை ஏற்பட்டது.

இதன் பிரகாரம் செயலிழந்துள்ள மின் பிறப்பாக்கியை சீரமைப்பதற்கான பணிகள் நேற்றைய தினம் இரவு முதல் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இருப்பினும் செயலிழந்துள்ள மின் பிறப்பாக்கியை சீரமைக்க கால தாமதம் ஏற்படும் என்பதால் இன்று மின் விநியோக தடை அமுல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply