தமிழகத்தில் இந்த வருடத்தின் முதல் சட்டப்பேரவை கூட்டம் தமிழ் நேற்றைய தினம் நடைபெற்றது.
இதற்கமைய குறித்த கூட்டம் கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்றது.
அத்துடன் இந்த கூட்டத்தில் தமிழக ஆளுநர் ஆர். என். ரவி உரையாற்றியுள்ளார்.
இதையடுத்து இரண்டாவது நாள் சட்டப்பேரவை கூட்டம் நடைபெற உள்ளது.
இன்றைய நிகழ்ச்சியில் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், முன்னாள் தமிழக ஆளுநர் ரோசய்யா, கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் உள்ளிட்டோரின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்படவுள்ளது.
மேலும் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதம் இன்று ஆரம்பமாகின்றது.
இதனை தொடர்ந்து கடலூர், சிவகாசி, காஞ்சிபுரம், காரூர், தாம்பரம், கும்பகோணம் ஆகிய 6 புதிய மாநகராட்சிகளுக்கான சட்ட முன் வடிவுகள் இன்று சட்டப்பேரவையில் அறிமுகம் செய்யப்படவுள்ளன.