இந்த மாதம் இறுதி வரை பால்மா தட்டுப்பாடு.

0

தற்போது சந்தையில் நிலவும் பால்மா தட்டுப்பாடு இந்த மாதம் இறுதி வரையில் தொடரும் என பால்மா இறக்குமதியாளர்கள் சங்கம் குறிப்பிட்டுள்ளது.

இந்நிலையில் இந்த மாத இறுதியிலோ அல்லது பெப்ரவரி மாதத்தின் முற்பகுதியிலோ பால்மா ஏற்றிய கப்பல்கள் வர உள்ள தாக அந்த சங்கத்தின் பேச்சாளர் அசோக பண்டார தெரிவித்துள்ளார்.

அத்துடன் தற்போது நாட்டில் நிலவும் தொடர் தட்டுப்பாடு காரணத்தால் கடந்த 31 ஆம் திகதி முதல் பால் மா பொதியின் விலையினை அதிகரிப்பதற்கு அதன் இறக்குமதியாளர்கள் தீர்மானித்துள்ளனர்.

இதன் பிரகாரம் இவ்வாறு இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ கிராம் பால்மா பொதியின் விலை 150 ரூபாவலும் 400 கிராம் பால்மா பொதியின் விலை 60 ரூபாவலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஒரு கிலோ கிராம் பாலாமா பொதி 1,345 ரூபாவிற்கும் 400 கிராம் பால் மா பொதி 540 ரூபாவிற்கும் விற்பனை செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது .

Leave a Reply