மத்திய மாகாணத்தில் பயிற்சியை நிறைவு செய்துகொண்ட பயிற்சி பட்டதாரிகளுக்கு நியமனங்கள் வழங்கப்படவுள்ளன.
இதற்கமைய 4,545 பட்டதாரிகளுக்கே குறித்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
அத்துடன் பல்லேகலையிலுள்ள மத்திய மாகாண சபை கேட்போர், கூடத்தில் மத்திய மாகாண ஆளுநர் லலித் யூகமகே தலைமையில் இது தொடர்பான நிகழ்வு இடம்பெற்றது .
மேலும் பயிற்சியாளர்களாக பாடசாலைக்கு நியமிக்கப்பட்டிருந்த 2,616 பேரும், உள்ளுராட்சி அமைப்புகளில் நியமிக்கப்பட்டிருந்த 705 பேரும் இதில் உள்ளடக்கப்பட்டிருந்தனர்.