தற்போது மாத்தளை சந்தையில் ஒரு கிலோ பச்சை மிளகாய் 1600 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் இவ்வாறு விலை அதிகரிப்பால் நுகர்வோர் பல இன்னல்களை எதிர்நோக்கியுள்ளனர்.
அத்துடன் பல நுகர்வோர் தற்போது 50 கிராம் பச்சை மிளகாயை மாத்திரமே வாங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இருப்பினும் தற்போது வரையில் சந்தையில் கிடைக்கும் பச்சை மிளகாய் பாரிய அளவு வீழச்சியடைந்துள்ளது.
இதன் பிரகாரம் ஒரு கிலோ பச்சை மிளகாய் இந்த அளவிற்கு விலை அதிகரித்துள்ளதாக விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
கடந்த வாரம் ஆயிரம் ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்ட பச்சைமிளகாய் தற்போது 1600 ரூபா வரை அதிகரித்துள்ளது.
மேலும் அடுத்து வாரங்களில் இது பல மடங்கு அதிகரிக்கலாம் என நுகர்வோர் கவலை வெளியிட்டுள்ளனர்.



