அரசாங்கத்தினால் அதிகரிக்கப்பட்டுள்ள பேருந்து கட்டண உயர்வு இன்று முதல் அமுலுக்கு வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் ஆகக்குறைந்த பேருந்து கட்டணம் 17 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் ஏனைய கட்டணங்கள் 17.44 சதவீதத்தினால் அதிகரிக்கப்பட்டுள்ளன.
மேலும் எரிபொருள் மற்றும் உதிரி பாகங்களின் விலை அதிகரித்த காரணத்தால் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் முன்வைத்த கோரிக்கைக்கு அமைய, போக்குவரத்து அமைச்சின் அண்மையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையில் பேருந்து கட்டணத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு இருந்தமை குறிப்பிடத்தக்கது.