இன்றைய வானிலை தொடர்பில் வெளியான தகவல்.

0

நாட்டின் பல பாகங்களிலும் இன்று இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் நாட்டின் கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும், பொலநறுவை, மாத்தளை மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களிலும் சில இடங்களில் இடைக்கிடையே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.

அத்துடன் முல்லைத்தீவு மற்றும் அனுராதபுரம் ஆகிய மாவட்டங்களில் பல இடங்களில் மழையுடனான வானிலை நிலவும்.

அவ்வாறு மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் கண்டி, காலி மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களில் சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆகவே பொதுமக்கள் அனைவரும் இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் மின்னல் தாக்கத்தினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக் கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறனர்.

Leave a Reply