மகாவலி கங்கை பகுதியை அண்மித்து வாழும் மக்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்பட வருமாறு நீர்பாசனத் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்நிலையில் சில நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் அதிகரித்துள்ள நிலையில் அவற்றிலிருந்து வெளியேறும் நீரானது மகாவலி கங்கையுடன் இணைந்து வருவதாக நீர்ப்பாசனத் திணைக்களத்தின் நீர் முகாமைத்துவ பிரிவு பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
இதன் பிரகாரம் மகாவலி கங்கை நீர் மட்டமும் உயர்வடைந்துள்ளது.
ஆகவே குறித்த பகுதியை அண்மித்து வாழும் மக்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.



