இலங்கை மின்சார சபை விடுத்துள்ள முக்கிய அறிவித்தல்.

0

இலங்கையில் நிலுவைத் தொகையை செலுத்த தவறியதற்காக சிவப்பு நிற அறிவித்தல் விடுக்கப்பட்ட நுகர்வோருக்கு புதிய சலுகைத் திட்டத்தை அறிமுகப்படுத்த இலங்கை மின்சார சபை தீர்மானம் எடுத்துள்ளது.

இந்நிலையில் நிலுவையில் உள்ள கொடுப்பனவுகளை செலுத்த தவறியவர்களின் மின்சார விநியோகத்தை இடைநிறுத்த ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய பல நுகர்வோர் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளதாக மின்சார சபையின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

மேலும் இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணத்தால் நிலுவையில் உள்ள கட்டணங்களை செலுத்த முடியவில்லை என நுகர்வோர் குறிப்பிட்டுள்ளனர்.

இதனால் மக்கள் தங்களின் தற்போதைய மற்றும் நிலுவையில் உள்ள கட்டணத் தொகையில் ஒரு பகுதியை செலுத்தினால் மின்சாரம் தடைபடுவதை தடுக்க முடியும் என மின்சார சபை அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply