உலக மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை.

0

உலகில் தொடர்ந்தும் பெருந்தொற்றுக்கள் பரவும் அபாயம் உள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்நிலையில் “கொரோனா என்பது மனித இனம் சந்திக்கும் கடைசி பெருந்தொற்று அல்ல.

இன்னும் நிறைய பெருந்தொற்றுக்கள் ஏற்படும்” என்று ஐக்கிய நாடுகளின் பொதுச்செயலாளர் என்டனியோ குட்டரஸ், தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் பதிவு ஒன்றை செய்துள்ளார்.

ஆகவே இந்த பெருந்தொற்றை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கும்போதே அடுத்த பெருந்தொற்றுக்கு தயாராக வேண்டும். என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்

உலக பெருந்தொற்று தயாராதல் தினத்தையொட்டி, இந்த எச்சரிக்கையை அவர் விடுத்துள்ளார்.

Leave a Reply