இசை நிகழ்ச்சிகளை நடத்த அனுமதி.

0

கொவிட் தொற்றுப் பரவல் காரணத்தினால் இசை நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு அனுமதி வழங்கப்படவில்லை.

தற்போது வெளியில் இசை நிகழ்ச்சிகளை நடத்த அனுமதி வழங்குமாறு சிரேஷ்ட காவல்துறை அதிகாரிகளை, காவல்துறை மா அதிபர் சீ.டி விக்ரமரத்ன அறிவுறுத்தியுள்ளார்.

சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைய இதனை நடத்த அவர் இணங்கியுள்ளார்.

இதற்கமைய, திங்கள், செவ்வாய், புதன், வியாழன் ஆகிய நாட்களில் மாலை 6 மணி முதல் 10 மணி வரையும்,

வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் மாலை 6 மணி முதல் அதிகாலை ஒரு மணி வரையும்,

மேலும் ஞாயிற்றுக்கிழமைகளில் மாலை 6 மணி முதல் அதிகாலை 12.30 மணி வரை இசை நிகழ்ச்சிகளை நடத்த முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply