டிசம்பர் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பு.

0

டிசம்பர் மாதத்தின் முதல் 20 நாட்களில் 47,120 வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் இலங்கையை வந்தடைந்துள்ளதாக சுற்றுலாத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் இந்த வருடமும் ஜனவரி முதல் இதுவரையில் 152,109 சுற்றுலா பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாகவும் குறித்த அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

அத்துடன் இலங்கையை கவர்ச்சிகரமான சுற்றுலா மையமாக மேம்படுத்தும் வகையில் ஒருங்கிணைந்த ஊக்குவிப்புத் திட்டம் அடுத்த வருடம் முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது.

மேலும் நாட்டுக்கு அதிகமான சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் நோக்கில் 2002 ஆம் ஆண்டு இலங்கை காண்போம் என்ற ஆண்டாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

Leave a Reply