பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நாளை நடைபெறவுள்ள ஆலோசனைக் கூட்டம்.

0

தற்போது உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் ஒமிக்ரோன் வைரஸ் தொற்று வெளிநாடுகளில் இருந்து திரும்பும் பயணிகள் மூலம் இந்தியாவிலும் பரவ தொடங்கியுள்ளது.

இந்நிலையில் குறித்த வைரஸ் தொற்று காரணமாக இந்தியாவில் மாத்திரம் 213 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதில் 90 பேர் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர்.

மேலும் தொடர்ந்து 123 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்..

இந்நிலையில் நாடு பூராகவும் ஒமிக்ரோன் பரவ தொடங்கியுள்ள நிலையில் வகையில் பிரதமர் மோடி நாளை ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார்.

மேலும் இந்த வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அவ்வாறு மாநிலங்களில் எடுக்கப்பட்டுள்ள தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசிக்கவுள்ளதாக தகவல் வெளியானது.

Leave a Reply