இலங்கையில் சில பகுதிகளில் இன்று மின் விநியோக தடை ஏற்படுவதற்கான சந்தர்ப்பங்கள் காணப்படுவதாக இலங்கை மின்சார சபையின் பொது முகாமையாளர் அறிவித்துள்ளார்.
இந்நிலையில் நுரைச்சோலை அனல் மின் உற்பத்தி நிலையத்தின், மின் பிறப்பாக்கி இயந்திரம் ஒன்றும் செயலிழந்துள்ளதன் அடிப்படையில் இவ்வாறு மின் துண்டிப்பு ஏற்படக்கூடும் என குறித்த சபை தெரிவித்துள்ளது.
மேலும் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் நுரைச்சோலை அனல் மின் உற்பத்தி நிலையத்தின் மின்பிறப்பாக்கிகள் செயலிழந்துள்ள காரணத்தால் நாடளாவிய ரீதியில் மின் விநியோகம் தடைபட்டது.
குறித்த மின்வெட்டு வேண்டுமென்றே செய்யப்பட்ட ஒன்றாக இருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளதாக இலங்கை மின்சார சபையில் சிரேஸ்ட மின் பொறியியலாளர்கள் சங்கம் தெரிவித்தது.
மேலும் குறித்த விடயம் தொடர்பில் ஆராய்வதற்கு நிபுணர் குழு ஒன்று நியமிக்கப்பட்டது டன்,அதன் அறிக்கை இதுவரை சமர்ப்பிக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.



