எதிர்வரும் பண்டிகை காலங்களில் போலி நாணயத்தாள்கள் புழக்கத்தில் விடப்படுவதற்கான சாத்தியக் கூறுகள் காணப்படுவதாக காவல்துறை ஊடக பேச்சாளர் சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
இதற்கமைய பொதுமக்கள் அனைவரும் குறித்த விடயம் குறித்து மிகவும் அவதானமாக செயற்படுமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும் நாட்டின் பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக போலி நாணயத்தாள்கள் அச்சடிக்கப்பட்ட சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.