நாட்டின் பல பாகங்களிலும் இன்று இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கமைய மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களின் சில பகுதிகளில் காலி மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களின் சில பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யும்.
அத்துடன் இரத்தினபுரி, களுத்துறை மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களில் சில இடங்களிலும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.
ஆகவே பொதுமக்கள் அனைவரும் இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் மின்னல் தாக்கத்தினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக் கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துக் கொள்ளுமாறு படுத்தப்படுகின்றன.



