வெளிநாட்டில் வசிக்கும் இலங்கையர்களுக்காக எடுக்கப்பட்ட தீர்மானம்.

0

வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்களுக்கு பிறப்பு, திருமணம் மற்றும் இறப்பு சான்றிதழ்களின் பிரதிகளை இணையத்தில் பெற்றுக்கொள்ளும் வசதிகளை ஏற்படுத்துவதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய பதிவாளர் நாயகம் திணைக்களம் அதற்கான நடவடிக்கைகளை திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அத்துடன் ஒவ்வொரு நாடுகளிலுமுள்ள இலங்கைத் தூதரகங்கள் மற்றும் உயர்ஸ்தானிகராலயங்கள் ஊடாக இந்த நடவடிக்கை ஒருங்கிணைக்கப்படும்.

மேலும் குறித்த விடயம் தொடர்பில் வெளிவிவகார அமைச்சுடன் இடம்பெற்ற கலந்துரையாடல் நிறைவடைந்ததாகவும் பதிவாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply