இலங்கையில் இதுவரை 8 மில்லியன் சேதன திரவ உரம் மற்றும் 3 லட்சம் டன் சேதனப் பசளை விநியோகிக்கப்பட்டுள்ளதாக ராஜாங்க அமைச்சர் சசீந்திர ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
தற்போது எஞ்சியவர்களுக்கான சேதனப் பசளை விநியோகிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் பயிர்ச் செய்கை மேற்கொள்ளப்படாத சகல வயல் காணிகளிலும் தெலுங்கு பயிரிட அமைச்சரவை அனுமதி அளித்துள்ளதாக சுற்றாடல் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
மேலும் அதற்கான சுற்றுநிறுபம் விரைவில் வெளியிடப்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.



