சவுதி அரேபியா நோக்கி புறப்பட்ட விமானம் மீண்டும் தரையிறக்கம்.

0

இலங்கை சர்வதேச விமான நிலையத்திலிருந்து சவுதி அரேபியாவின் தாமாம் நோக்கி புறப்பட்ட விமானம் ஒன்று, ஹைட்ரோலிக் அமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக நேற்றிரவு மீண்டும் கட்டுநாயக்கவில் தரையிறக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய குறித்த விமானம் புறப்பட்டு இரண்டு மணித்தியாலங்கள் 10 நிமிடங்கள் ஆன பின்னரே இவ்வாறு தரையிறக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்போது குறித்த ஏ 320 எயார் பஸ் விமானத்தில் 146 பயணிகள் மற்றும் 11 பணிக்குழாம் உறுப்பினர்கள் உட்பட 156 பேர் இருந்துள்ளனர்.

அத்துடன் கட்டுநாயக்கவில் இருந்து மாலை 5.45 க்கு புறப்பட்ட இந்த விமானம் இரவு 7.55 க்கு தரையிறக்கப்பட்டமை குறிப்பிடதக்கது.

Leave a Reply