பண்டிகை காலத்தில் பயணத் தடையா?

0

எதிர்வரும் பண்டிகை காலத்தில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்ப்படுத்தப்படாமல் இருப்பதற்கு மாற்று வழியை பயன்படுத்தி நிலைமையினை மாற்றி அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென ராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.

இதற்கமைய நடமாட தடை அமுல்ப்படுத்தப்படாமல் பூஸ்டர் தடுப்பூசி வழங்கும் செயற்பாட்டை வலுப்படுத்தப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் எதிர்வரும் பண்டிகைக் காலத்தின் போதும் பொதுமக்கள் ஒன்று கூடுவதை தவிர்த்துக் கொள்ள வேண்டும் என சுகாதார தரப்பினர் அறிவுறுத்தி வருகின்றனர்.

மேலும் அதிகளவிலான சனக் கூட்டம் மிக்க பகுதிகளுக்கு செல்வதை பொதுமக்கள் தவிர்த்துக்கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Leave a Reply