உலக சுகாதார ஸ்தாபனம் விடுத்துள்ள கோரிக்கை.

0

தற்போது பரவல் அடைந்து வரும் ஒமிக்ரொன் திரிபு காரணத்தால் செல்வந்த நாடுகள், கொவிட் தடுப்பூசிகளை பதுக்கி வைப்பதை தவிர்க்குமாறு உலக சுகாதார ஸ்தாபனம் கோரிக்கை விடுத்துள்ளது.

இதற்கமைய ஒமிக்ரொன் திரிபு பரவல் நிலை காரணத்தால் சில செல்வந்த நாடுகள் , செயலூக்கி தடுப்பூசி ஏற்றலை துரித படுத்துகின்றன.

இதன் பிரகாரம் பெருமளவில் மக்களுக்கு தடுப்பூசி சொலுத்தாதுள்ள நாடுகளுக்கான விநியோகத்தில் இது தாக்கம் செலுத்தும் என உலக சுகாதார ஸ்தாபனம் சுட்டிக்காட்டியுள்ளது.

ஆகவே செல்வந்த நாடுகள் தடுப்பூசி பதுக்கி வைப்பதை தவிர்த்துக் கொள்ளுமாறு உலக சுகாதார ஸ்தாபனம் கோரிக்கை விடுத்துள்ளது.

Leave a Reply