அரச மற்றும் அரசு அனுமதி பெற்ற தனியார் பாடசாலைகளுக்கு டிசம்பர் மாதம் வழங்கப்படவுள்ள விடுமுறையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இதற்கமைய கிறிஸ்மஸ் தினத்தை முன்னிட்டு எதிர்வரும் 23ஆம் திகதி முதல் 27 ஆம் திகதி வரையில் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்குவதற்கு கல்வி அமைச்சினால் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் குறித்த தீர்மானத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டு உள்ளது.
அதற்கமைய எதிர்வரும் 24ஆம் திகதி முதல் 2002 ஜனவரி 2ஆம் திகதி வரை குறித்த விடுமுறையை வேடிக்கை கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.
இதன் பிரகாரம் 2022 ஜனவரி 3ஆம் திகதி பாடசாலைகள் மீண்டும் ஆரம்பமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.