இலங்கையில் ஒமிக்ரோன் திரிபு தொடர்பில் அடுத்த இரண்டு மூன்று வாரங்களில் தெளிவான கருத்தை அறிய முடியும் என ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் நீலிகா மளவிகே தெரிவித்துள்ளார்.
இதற்கமைய எந்த திரிபு கண்டுபிடிக்கப்பட்டாலும், சுகாதார வழிகாட்டல் கோவையை பின்பற்றுவது முக்கியமானதாகும்.
அத்துடன் ஒமிக்ரொன் கொவிட் வைரஸ் தொற்றை ஏற்படுத்தும் ஆற்றலானது , டெல்டா மற்றும் பீட்டா திரிபுகளுடன் ஒப்பிடும் போது மூன்று மடங்கு அதிகமானது.
தென்னாபிரிக்காவில் ஒமிக்ரொன் திரிபு முதன்முறையாக கண்டறியப்பட்டுள்ள நிலையில் அந்த நாட்டின் கொவிட் நிலவரம் குறித்த தகவல்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன.
மேலும் இதன்போது குறித்த விடயம் கண்டறியப்பட்டதாக தென்னாப்பிரிக்க விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.